(செ.தேன்மொழி)
கம்பஹா பகுதியில் இரண்டு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய போலி நாணயத்தாள்களுடன் கம்பஹா பெத்தியாகொட பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரும் , வெல்லம்பிட்டி - மீதொட்டுமுல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, கம்பஹா குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, சீதுவ - அம்பலன்முல்ல பகுதியிலுள்ள வீடொன்று சோதனைக்குட்படுத்தப்பட்ட போது , அவ்வீட்டிலிருந்து 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன் போது போலி 5000 ரூபாய் நாணயத்தாள்கள் 4 , 1000 ரூபாய் நாணயத்தாள்கள் 133 , 100 நாணயத்தாள்கள் 71 , 50 ரூபாய் நாணயத்தாள்கள் 747 , மடிக்கணனி, அச்சு இயந்திரம் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர். தற்போது போலி நாணயத்தாள்களை அச்சுடுவது அதிகரித்து வருவதனால், பண கொடுக்கல் வாங்களின் போது தங்களுக்கு கிடைக்கப்பெறும் பணம் போலியானதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இதன்போது பணம் தொடர்பில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் , உடனே அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்துக்கு அது தொடர்பில் அறிவிக்க வேண்டும். மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் விசேட பொலிஸ் குழுவினரும் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM