செய்திப்பிரிவு
இறுதிக்கட்ட போர் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக துணிந்து குரல் கொடுத்த கே.ஏ.பாயிஸின் இழப்பு பெரும் கவலையை ஏற்படுத்துகின்றது.
விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் புத்தளம் நகரசபை தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாயிஸின் இழப்பு ஈடுசெய்ய முடியாது.
அவர் சிறுபான்மை சமூகத்தினருக்காக துணிச்சலுடன் குரல் கொடுத்தவர் என முன்னாள் பிரதியமைச்சர் பெ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில் ,
இறுதிக்கட்ட போரின் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் அப்போதைய ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்பில் உள்ளவர்கின் விசாரணைகளை கண்காணிக்க ராஜித சேனாரத்ன , வாசுதேவ நாணயக்கார, டலஸ் அழகப்பெரும மற்றும் பாயிஸ் ஆகியோருடன் என்னையும் இணைத்து ஒழு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவின் முக்கியமானதொன்றாக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை கண்காணிப்பது காணப்பட்டது. இந்த காலப்பகுதியில் மறைந்த கே.ஏ.பாயிசுடன் நெருங்கி சேவையாற்றிருக்கின்றோம்.
அவர் சிறுபான்மை சமூகத்தினருக்காக துணிச்சலுடன் குரல் கொடுத்தவர். தைரியமாக குரல் கொடுத்தவர் . அவரது மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. மூவின மக்களுக்காகவும் சேவை செய்துள்ளார் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM