நாட்டில் கொவிட் தொற்று நிலை நாளாந்தம் அதிகரித்து வருகின்ற நிலையில், தொற்றாளர்களுக்கு முறையான சிகிச்சை வழங்குவதற்குத் தேவையான மருத்துவ உபகரணங்களுக்கும், நோயாளர்களின் தினசரி பாவனைக்குத் தேவையான பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்களில் இருந்து அறியக்கூடியதாக இருக்கின்றது.
இத் தகவலின் அடிப்படையில் கண்டி மாவட்டத்தில் மடுல்கலையில் அமைந்துள்ள அரசினர் பொது வைத்தியசாலையின் பிரதான வைத்தியரை தொடர்பு கொண்ட மால்போ டிரேடிங் கம்பனி உரிமையாளரும், மடுல்கலை பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்டவருமான முத்துவேல் மணிமுத்து அங்கு நிலவும் குறைபாடுகளைக் கேட்டறிந்தார்.
அதன் பின்னர், கண்டி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பிரதிப் பணிப்பாளர் ஆகியோரின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் பேரில் மேற்படி வைத்தியசாலைக்குத் தேவையான பொருட்களை வழங்குவதற்கு முத்துவேல் மணிமுத்து நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன் அப் பொருட்கள் கண்டி, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களின் கண்காணிப்பின் கீழ் 21.05.2021 அன்று உரிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM