கொரோனாத் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்திருக்கும் தளர்வுகற்ற ஊரடங்கை முழுமையாக கடைப்பிடித்து, கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க உறுதி ஏற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இதுதொடர்பாக காணொளி ஒன்றை சுட்டுரையில் பதிவிட்டு, அதில் அவர் பேசியதாவது...
'முழுமையான தளர்வுகளற்ற ஊரடங்கை மக்கள் தவறாக புரிந்துகொள்ளக்கூடாது. முந்தைய ஊரடரங்கில் அளிக்கப்பட்டிருந்த தளர்வுகளை மக்கள் தவறாகப் பயன்படுத்தியதால், தளர்வுகளற்ற பொது முடக்கம் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா பரவல் சங்கிலியை உடைப்பதற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு அவசியமாகிறது. மருத்துவ தேவையைத் தவிர வேறு எதற்காகவும் மக்கள் வெளியே வரவேண்டாம்.
அத்தியாவசிய பொருட்களும் வீடு தேடி வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'கொரோனாவை யாருக்கும் கொடுக்க மாட்டேன். யாரிடமும் பெறவும் மாட்டேன்' என்று நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். முழு ஊரடங்கை கடைப்பிடித்து கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க உறுதி ஏற்போம்.' என மு.க.ஸ்டாலின் அதில் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே 24.05.2021 முதல் 30.05.2021 வரை ஒரு வார காலத்திற்கு தமிழகம் முழுவதும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக தளர்வுகளற்ற பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM