தாக்தே சூறாவளியையடுத்து வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள 'யாஸ்' என்ற சூறாவளி மே 26 அன்று ஒடிசா-மேற்கு வங்கக் கடற்கரைகளைக் கடக்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை அவதானிப்பு நிலையம் திங்களன்று தெரிவித்துள்ளது.
155-165 கி.மீ வேகத்தில் காற்று வீசும் மிகக் கடுமையான 'யாஸ்' சூறாவளி மே 26 ஆம் திகதி நண்பகலில் பரதீப் மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையில் ஒடிசா-மேற்கு வங்கக் கடற்கரைகளை கடக்க வாய்ப்புள்ளது என்று கொல்கத்தாவின் பிராந்திய வானிலை நிலைய துணை பணிப்பாளர் சஞ்சிப் பந்தோபாத்யாய் குறிப்பிட்டார்.
இந்தப் புயல் திங்கட்கிழமை காலை ஒடிசாவின் பரதீப்பிலிருந்து தென்கிழக்கு 540 கி.மீ தொலைவிலும், மேற்கு வங்காளத்தின் திகாவிலிருந்து 630 கி.மீ தென்கிழக்கு திசையிலும் நிலை கொண்டுள்ளது.
மேலும் 'யாஸ்' வட-வடமேற்கு நோக்கி நகர்ந்து புதன்கிழமை காலைக்குள் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரைகளுக்கு அருகிலுள்ள வடமேற்கு வங்க விரிகுடாவை அடையும்.
கடலோர மாவட்டங்களான பூர்பா மற்றும் பாசிம் மெடினிபூர், தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கனா, ஹவுரா மற்றும் ஹூக்லி ஆகியவற்றில் மே 25 முதல் புயல் தாக்கத்தினால் கன மழை பெய்யக் கூடும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஒடிசா அரசாங்கம் திங்களன்று கொரோனா வைரஸ் அவசரகால நிலையை தளர்த்தியதுடன், மே 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 10 கடலோர மாவட்டங்களில் கடைகள் திறந்து வைக்கவும் அனுமதி வழங்கியுள்ளது.
அதேநேரம் ஒடிசா அரசாங்கம் மீட்புக் குழுக்களை நிறுத்தியுள்ளதுடன், புயலால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் உறுதிபடுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM