டோக்கியோ மற்றும் ஒசாகாவில் வயதானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை ஜப்பான் இராணுவ மருத்துவர்களும், செவிலியர்களும் திங்கட்கிழமை விரைவுபடுத்தியுள்ளது.
ஒலிம்பிக் நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் ஜப்பான் தடுப்பூசி செலுத்தலை விரைவுபடுத்தியுள்ளதுடன், கொரோனா வைரஸ் தொற்றுகளைத் தடுப்பதற்கும் தீவிரமாக முயற்சித்து வருகிறது.
பிரதம அமைச்சர் யோஷிஹைட் சுகா ஒரு வருட தாமதத்திற்குப் பிறகு இந்த கோடையில் டோக்கியோவில் ஒலிம்பிக்கை நடத்துவதில் உறுதியாக உள்ளார்.
மேலும் ஜூலை மாத இறுதிக்குள் நாட்டின் 36 மில்லியன் வயதானவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதாக உறுதி மொழியையும் அளித்துள்ளார்.
அதேநேரம் பொதுப் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில் ஜூலை 23 ஆம் திகதி தொடங்கவிருக்கும் விளையாட்டுகளை இரத்து செய்வதற்கான அழைப்புகளும் வெளிவந்த வகையிலேயே உள்ளன.
சுகாவின் அரசாங்கம் ஏப்ரல் பிற்பகுதியிலிருந்து வைரஸ் அவசரகால நிலையினை மீண்டும் விரிவுபடுத்தியுள்ளது.
தற்போது டோக்கியோ மற்றும் நாட்டின் பிற மக்கள் தொகையில் 40 சதவீதமானோர் வசிக்கும் 9 பிற பகுதிகள் அவசரநிலைக்கு உட்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM