இத்தாலியில் கேபிள் கார் அறுந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் உயிர் தப்பிய ஒரு சிறுவன் எலும்புகள் உடைந்த நிலையில் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களில் இத்தாலியில் வசித்த நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் உட்பட 6 இஸ்ரேலிய பிரஜைகள் உள்ளடங்குவதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விபத்து தொடர்பாக இத்தாலி அரசாங்கம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த கேபிள் கார் சுமார் 50 அடி விழுந்ததாக நம்பப்படுவதாக இத்தாலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இத்தாலி நாட்டின் ஆல்ப்ஸ் மலைத்தொடர் அருகே உள்ள ஏரி ஒன்றை சுற்றுலாப்பயணிகள் பார்வையிட ஏதுவாக கேபிள் கார் வசதி செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கேபிள் கார் சேவை அண்மையில் மீண்டும் தொடங்கியதால் ஏராளமானோர் வருகை புரிந்தனர்.
இந்நிலையில் நேற்று கேபிள் கார் ஒன்று நடுவழியில் அறுந்து பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது.
இத்தாலி ஜனாதிபதி செர்ஜியோ மட்டரெல்லா தனது இரங்கலைத் தெரிவிக்கையில், போக்குவரத்தில் அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் கடுமையாக மதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM