(எம்.மனோசித்ரா)
இலங்கையில் கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சனிக்கிழமை கொவிட் தொற்றுக்குள்ளான மற்றுமொரு கர்ப்பிணி தாயும் உயிரிழந்துள்ளதோடு , மேலும் 46 கொவிட் மரணங்களும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டது.
குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய கர்ப்பிணியொருவரே இவ்வாறு கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
ஹோமாகம வைத்தியசாலையிலிருந்து முல்லேரியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார்.
அதற்கமைய இலங்கையில் இது வரையில் கொவிட் தொற்றால் 5 கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சனியன்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்கள் இம்மாதம் 16 ஆம் திகதி முதல் நேற்று சனிக்கிழமை வரை பதிவாகியமையாகும்.
அதற்கமைய மீட்டியாகொட, அக்மீமன, பதுளை, ஹவ்பே, காலி, ஹல்விட்டிகல, உனவட்டுன, அஹங்கம, தொடங்தூவ, கந்தேபொல, நுவரெலியா, பல்லேவெல, கொழும்பு-15, அக்குரங்கொட, வஸ்கடுவ, தெகட்டன, பயாகல, பொரலஸ்கமுவ, உடஹமுல்ல, பேராதனை, மெனிக்ஹின்ன, கட்டுகஸ்தோட்டை, பிலிமத்தலாவ, கந்தானை மற்றும் குண்டசாலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 37 - 93 வயதுக்கு இடைப்பட்ட ஆண்களும், ரத்கம, பத்தேகம, இமதூவ, கரந்தெனிய, பட்டபொல, வத்தளை, மினுவாங்கொட, குருணாகல், களுத்துறை, யக்கல, மாலபே, பேராதனை, கொழும்பு-15 மற்றும் மட்டக்குளி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 29 - 92 வயதுக்கு இடைப்பட்ட பெண்களும் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1178 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்
இன்று ஞாயிறுக்கிழமை இரவு 9.30 மணி வரை நாட்டில் 2945 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டது. அதற்கமைய நாட்டில் நேற்று மாலை வரை இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 64 186 ஆகும்.
இவர்களில் 66 501 தொற்றாளர்கள் புத்தாண்டின் பின்னர் தொற்றுறுதி செய்யப்பட்டவர்களாவர். இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் ஒரு இலட்சத்து 26 994 பேர் குணமடைந்துள்ளதோடு , 33 734 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று காலை 1635 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற 68 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 5755 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM