மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் சிறைக்கைதிகள் 8 பேர் உட்பட 46 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 1,833 ஆக அதிகரித்துள்ளதாக இன்று ஞாயிற்றுக்கிழமை (23) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேரும், களுவாஞ்சிக்குடி மற்றும் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா ஒருவர் வீதம் 2 பேரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேரும், ஓட்டுமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 பேரும். வவுணதீவு மற்றும் கிரான் சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா 2 பேர் வீதம் 4 பேரும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேரும், ஏறாவூர் மற்றும் பட்டிருப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா 3 பேர் வீதம் 6 பேர் உட்பட 46 பேருக்கு பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படடுள்ளது.
இதேவேளை, இதுவரை 32,380 பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 22 மரணங்கள் இடம்பெற்றுள்ளது. எனவே பொது மக்கள் வீட்டை விட்டு முடிந்தளவு வீதிக்கு வருவதை தவிர்துக்கொள்ளுமாறு என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM