நாட்டின் பல நதி நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அடுத்த சில நாட்களில் நாட்டின் தென் மேற்கு பருவபெயர்ச்சி காரணமாக ஏற்படும் மழையுடனான வானிலையினால் பல நதிப் படுகைகளில் பேரழிவு தரக்கூடிய வெள்ள நிலைமை ஏற்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, மீ ஓயா, தேதுரு ஓயா, மஹா ஓயா, அத்தநாகல்லு ஓயா, களனி கங்கை, களு கங்கை, பெந்தர கங்கை, ஜின் கங்கை, நிலவள கங்கை மற்றும் கிராம ஓயா ஆகியவை வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்படலாம்.
இதனால் குறித்த நீர் நிலைகள் அண்மித்த மற்றும் தாழ்வான பகுதி வாழ் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் பெய்த கனமழையால் நாட்டின் பல நீர்த்தேக்கங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், குறிப்பாக தேதுரு ஓயா, உடவலவ மற்றும் இகினிமிட்டிய நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே அதிகபட்ச திறனை எட்டியுள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM