அனைத்து மதுபான உரிமம் பெற்ற இடங்களை மூடுவதற்கு உத்தரவு

Published By: J.G.Stephan

23 May, 2021 | 07:32 AM
image

நாட்டிலுள்ள அனைத்து மதுபான உரிமம் பெற்ற நிலையங்களையும் இம்மாதம் 25 ஆம் திகதி வரை மூட வேண்டும் என மதுவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் அன்றைய தினம் நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு மதுவரித்திணைக்கள ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு(21.05.2021) 11 மணி முதல் நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில்,  எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை இந்த பயணக்கட்டுப்பாடு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  நாட்டில் எதிர்வரும் 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் கொவிட் நிலைவரம் எவ்வாறுள்ளது என்பதை மதிப்பீடு செய்து போக்குவரத்து கட்டுப்பாடுகளை தொடர வேண்டுமா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04