திருகோணமலையில் இந்திய பொருளாதார வல யத்தை அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இதுவரையில் எந்தவிதமான இறுதித் தீர்மானமும் எடுக்கப்படவில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று புதன்கிழமை சபையில் தெரிவித்தார்.
ஆனால் திருகோணமலையிலுள்ள கடற்படை மற்றும் விமானப்படைக்கு சொந்தமான காணிகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என்றும் பிரதமர் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஜே.வி.பி. எம்.பி பிமல் ரத்னாயக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
திருகோணமலை துறைமுகத்தை அண்டியதாக இந்தியாவின் விசேட பொருளாதார அல்லது கைத்தொழில் வலயமொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதா என தேசிய பொருளாதார அலுவல்கள் அமைச்சரென்ற ரீதியில் இக்கேள்வி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்கப்பட்டது.
பிரதமர் தனது பதிலில் மேலும் தெளிவுபடுத்துகையில்,
திருகோணமலையில் இந்திய பொருளாதார வலயமொன்று அமைக்கப்படவுள்ளது. இவ் வலயத்தை இலங்கை நிறுவனம் அமைத்து அதனை இந்திய நிறுவனங்களுக்கு வழங்குவதா அல்லது இந்தியாவிற்கு நிறுவனங்கள் அமைப்பதற்கும் நிர்வாகிப்பதற்கும் அனுமதி வழங்குவதா? என்ற விடயங்கள் தொடர்பாக தற்போது ஆராயப்பட்டு வருகின்றது.
அதே வேளை சிங்கப்பூர் நிறுவனமொன்று திருகோணமலையில் பொருளாதார வலயங்களை அமைக்கப்படுவது தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றது. அத்தோடு கணிப்பீடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறன என்றும் பிரதமர் தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட ஜே.வி.பி. எம்.பி பிமல் ரத்னாயக இலங்கையில் யாருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றது என இடைக்கிடையே கேட்டார்.
இதற்கு பதிலளித்த பிரதமர்
மாகாண (மெகா பொலிஸ்) அமைச்சின் உயரதிகாரி அஜித் கொஸ்தா உட்பட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன. அதேவேளை திருகோணமலையிலுள்ள கடற்படை மற்றும் விமானப்படைக்கு சொந்தமான காணிகளில் எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது.
அக் காணிகள் இன்றிருப்பதைப் போன்றே தொடர்ந்து காணப்படும்.
அதேவேளை திருகோணமலை பொருளாதார வலயம் தொடர்பில் எவ்விதமான இறுதி முடிவும் இன்று வரை எடுக்கப்படவில்லையென்றும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM