ஏ.என்.ஐ
ராவல்பிண்டி வீதி திட்டத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு காரணமாக பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி என்பன வலியுறுத்தியுள்ளன.
பாகிஸ்தான் பிரதமர் , பஞ்சாப் முதலமைச்சர் உஸ்மான் புஸ்தார் மற்றும் உள்துறை ஆலோசகர் ஷாஜாத் அக்பர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஊழலில் சிக்கயவர்களை அரசாங்கம் பாதுகாப்பதாக சாடியுள்ள முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவருமான ஷாஹித் கான் , பிரதமர் மாளிகையில் உள்ள அனைவரும் நிதி தேடுவதில் மும்முரமாக உள்ளதாகவும் இரட்டை தரமான நீதி செயற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
என்னை போன்று ஷாபாஸ் ஷெரிப் மற்றும் அஹ்சன் இக்பால் ஆகியோருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் சிறைவைக்கப்பட்டனர். ஆனால் இதுவரை ராவல்பிண்டி வீதி திட்டத்தில் மோசடியில் யாரும் கைது செய்யப்பட வில்லை என்றும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் ராவல்பிண்டி வீதி திட்டத்தில் மோசடி குறித்து ஆராயுமாறு பாகிஸ்தான் தேசிய பொறுப்புக்கூறல் பணியகத்தின் தலைவர் ஜாவேத் இக்பால் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவிற்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM