செ.தேன்மொழி
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஐஸ் ரக போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
மட்டக்குளி பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரினால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது முச்சக்கர வண்டியில் ஐஸ் ரக போதைப் பொருளை கடத்தியமை தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வத்தளை பகுதியைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 205 கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படும் சந்தேக நபரொருவருக்கு சொந்தமான போதைப் பொருட்களையே குறித்த சந்தேக நபர் இவ்வாறு கடத்தி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வத்தளை, மட்டக்குளி , முகத்துவாரம் மற்றும் கிரேண்ட்பாஸ் ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு போதைப் பொருட்களை கடத்தி வந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM