(எம்.எம்.சில்வெஸ்டர்)
பங்களாதேஷில் கிரிக்கெட் சுற்றுலாவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்காக நடைபெற்ற உடற்பயிற்சி பரிசோதனையில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவர் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டித் தொடர் நாளை (23) ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில், வீரர்களுக்கான உடற்பயிற்சி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவேளையிலேயே இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவர் தோல்வியடைந்துள்ளனர்.
இவ்வாறு, பங்களாதேஷில் நடத்தப்பட்ட இந்த உடற்பயிற்சி பரிசோதனையில் தோல்வியுற்ற இருவரும், இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப் பயணத்தில் இணைத்துக்கொள்ளப்படுவார்களா என்பதை உறுதியாக கூறமுடியாதுள்ளது.
அவர்கள் இருவரும் எதிர்காலத்தில் மீண்டும் ஒருமுறை உடற்பயிற்சி பரிசோதனையில் ஈடுபட நேரிடும். அதில் அவர்கள் வெற்றியடைந்தால் மாத்திரமே இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் இணைத்துக்கொள்ளவதற்கான வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு உடற்பயிற்சி பரிசோதனையில் தோல்வியடைந்தவர்கள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணதிலக்க மற்றும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இந்த பருவக்காலத்துக்கான சம்பள ஒப்பந்தத்தில் அதிகூடிய தொகை (ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்) வழங்கப்பட்டுள்ள தனஞ்சய டி சில்வா ஆகிய இருவரும் ஆவர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM