'பிளக் பங்கஸ்' நோயை பெருந்தொற்று நோயாக அறிவித்த இந்திய மத்திய அரசு, இதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து அச்சுறுத்தி உயிரை பறித்து வரும் நிலையில் பிளக் பங்கஸ் என்ற தொற்று தற்போது மக்களிடையே அதிகமாக பரவி வருகிறது.
பொதுவாக எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் இந்தத் தொற்று, தற்போது கொரோனா நோய்த் தொற்று உள்ளவர்களுக்கும் ஏற்படுகிறது.
பல்வேறு மாநிலங்களிலும் பிளக் பங்கஸ் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கறுப்பு பூஞ்சை நோயால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முகராமைகோசிஸ் எனப்படும் பிளக் பங்கஸ் நோய் கண் ,மூக்கு, சுற்றுப்பாதையை பாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் கண் பலவீனமடையும் என்றும் நுரையீரலையும் பாதிக்கும் என்றும் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக, பிளக் பங்கஸ் தொற்று நோயாக அறிவிக்கப்பட்டு பட்டியலிட்டுள்ளது. அதன்பின்பு ராஜஸ்தான், தெலுங்கானா, ஹரியானா மாநில அரசுகள் இந்த நோயை அறிவிக்கப்பட்ட நோய் பட்டியலில் சேர்த்தது.
தமிழக அரசும் பிளக் பங்கஸ்தொற்றை அறிவிக்கப்பட்ட நோயாக இன்று பட்டியவிட்டுள்ளது.
இந்நிலையில் பிளக் பங்கஸ் நோயை கொள்ளை நோயாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM