உயர்தரம் , சாதாரண தர பரீட்சைகளை பிற்போடுவது தொடர்பில் கல்வி அமைச்சு அவதானம்

Published By: Digital Desk 4

20 May, 2021 | 09:38 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இவ்வருடம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் க.பொ.த. சாதரணத்தரப் பரீட்சை என்பவற்றை பிற்போடப்படுவதற்கு  கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் மாதத்திலும், க.பொ.த. சாதாரணப் பரீட்சை அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளபோதிலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாததன் காரணமாக இந்த இரண்டு பரீட்சைகளையும் பிற்போடுவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டு 200 நாட்கள் கல்வி நடவடிக்கைகள்  நடத்தப்படவேண்டியிருந்தபோதும், அது 150 நாட்கள் மாத்திரமே நடத்தப்பட்டிருந்தது. எனினும்,

இந்த எண்ணிக்கை மேல் மாகணத்தில் 130 நாட்கள் மாத்திரமே நடத்தப்பட்டிருந்ததாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

இணையவழியூடாக பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை செயற்படுத்தப்பட்டாலுமே,  நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கு அதற்கான வசதி கிடைக்காததன் காரணமாக அது வெற்றிகரமாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு மாணவர்களுக்கு முறையாக கல்வி நடவடிக்கைகளை வழங்குவதற்கு இதுவரை முடியாதுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதில் சிக்கல் நிலை காணப்படுவதுடன், பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதும் மேற்படி இரண்டு பரீட்சைகளை நடத்துவதற்கான திகதிகளை குறிப்பிட முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில்...

2024-03-29 15:37:15
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37