யுத்தவெற்றியை நிலையான விடுதலையாக ஆக்கிக்கொள்ள 13ஆவது திருத்தத்தை, அவ்வாறே செயற்படுத்தவேண்டும் - சஜித் பிரேமதாச

Published By: Digital Desk 3

19 May, 2021 | 04:55 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

வெற்றிகொள்ளப்பட்டிருக்கும்  விடுதலையை நிலையான விடுதலையாக ஆக்கிக்கொள்ளவேண்டும். அதற்காக 13ஆவது திருத்தத்தை, தற்போது செயற்படுத்தப்படும் அதேமுறையில் செயற்படுத்தி, நாட்டில் ஏனைய சிறுபான்மை மக்களின் பாதுகாப்புத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற பிரேரணையை முன்வைக்கின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று யுத்தவெற்றி தினம் தொடர்பில் அவர் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பயங்கரவாதத்துக்கு எதிராக வெற்றிகொள்ளப்பட்டிருக்கும் இந்த நாட்டின் விடுதலையை நிலையான விடுதலையாக மாற்றிக்கொள்ளவேண்டும்.

அதற்காக இந்த வெற்றியை அடைந்துகொள்ள தனது உயிரை தியாகம் செய்து போராடிய படைவீரர்கள், அதனால் விதவையானவர்கள், அங்கவீனமுற்றவர்கள் மற்றும் அனைத்து படைவீரர்களுக்கும் உயர்ந்த அந்தஸ்த்தை கெளரவத்தை வழங்கவேண்டும்.

அதற்காக குறைநிரப்பு பிரேரணை ஒன்றை கொண்டுவந்து, ராணுவ வீரர்களுக்கு நாங்கள் வாக்களித்த அனைத்து உரிமைகளையும் பெற்றுக்கொடுக்க நாங்கள் எமது ஆதரவை பூரணமாக வழங்குவதற்கு தயார்.

மேலும் ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்தது, இந்த நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்காகும். நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியினருக்கு பாதுகாப்பு அற்ற தன்மை நிலவுவதாக இருந்தால், தொடர்ந்தும் அநீதி ஏற்படுவதாக அவர்கள் நினைப்பதாக இருந்தால், அந்த பிச்சினைகளுக்கு மத்தியில் எமது நாட்டில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதில்லை.

அதனால் அந்த தொகுதியினருடன் கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்து, விசேடமாக ஒற்றையாட்சிக்குள் 13ஆவது திருத்தத்தை, தற்போது செயற்படுத்தப்படும் அதேமுறையில் செயற்படுத்தி, அந்த மக்கள் தொகுதியினருக்கும் மதத்தவர்களுக்கும் செவிசாய்த்து, அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் பாதுகாப்பற்ற நிலைதொடர்பில் அவர்களது வேண்டுகோல்களுக்கும் செவிசாய்த்து, வெற்றிகொள்ளப்பட்டிருக்கும் இந்த வெற்றியை, விடுதலையை நிலையான விடுதலையாக ஆக்கிக்கொள்ளவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33