(செ.தேன்மொழி)
பாணந்துறை பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஆறு பெண்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சூதாட்டத்தை பெண்களே ஒழுங்கு செய்துள்ளதுடன், இதன்போது ஆறு பெண்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மொரவின்ன , மாதுபிட்டி மற்றும் திப்பெத்த ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30 - 48 ஆகிய வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 6 தொலைபேசிகள் மற்றும் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. பாணந்துறை தெற்கு பொலிஸார் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM