சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 7 பேர் கைது

Published By: J.G.Stephan

19 May, 2021 | 04:37 PM
image

(செ.தேன்மொழி)
பாணந்துறை பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஆறு பெண்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனிமைப்படுத்தல்  சட்டவிதிகளுக்கு புறம்பாக சிலர் சூதாட்டத்தில்  ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட  தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சூதாட்டத்தை பெண்களே ஒழுங்கு செய்துள்ளதுடன், இதன்போது ஆறு பெண்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மொரவின்ன , மாதுபிட்டி மற்றும் திப்பெத்த ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30 - 48 ஆகிய வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 6 தொலைபேசிகள் மற்றும் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. பாணந்துறை தெற்கு பொலிஸார் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30