(எம்.மனோசித்ரா)
முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்று 12 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், நாம் விரும்புகின்ற அளவிற்கு ஜனநாயகமும் சமாதானமும் நிலைநாட்டப்படாமல் இருப்பது கவலைக்குரியது. இலங்கையில் வாழும் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சமூகங்கள் எல்லோரும் இலங்கையர்கள் என்ற கூற்றின் அடிப்படையில் பூரண சுதந்திரத்துடன் சம உரிமையுடன் வாழக்கூடிய ஒரு சமுதாயத்தை கட்டியெழுப்ப நாடு முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு காணொளியொன்றின் மூலம் அவர் மேலும் தெரிவித்ததாவது :
மே 18 ஆம் திகதி இலங்கை அரசியலுக்கு ஒரு முக்கிய நாளாகும். இந்நாள் வெறுமனே ஒரு பிரிவினைவாத மற்றும் பயங்கரவாத போரின் முடிவு மட்டுமல்லாமல் வட்டுக்கோட்டையில் தமிழர் செய்த பிரகடனம், அதாவது தமிழர் ஒரு தேசிய இனம். எனவே அவர்களுக்கு சுதந்திரமாக வாழக் கூடிய ஒரு தனி நாடின் உரிமை இருக்கிறது என்று கூறிய அந்த அரசியல் கூற்றின் நீண்ட 33 வருட பயணத்தின் முடிவாகவே மே 18 ஆம் திகதி காணப்படுகிறது.
போரின் வெற்றியோ, அரசியல் வெற்றியோ, தேர்தல் வெற்றியோ உண்மையான அர்த்தம் காண வேண்டுமெனில் அந்த வெற்றி பெற்றவர்கள் , மக்களின் அரசியல், பொருளாதாரம், கலாசாரம், சமூக சுதந்திரத்திற்கு இடம்கொடுத்து, புதியவொரு சமூக கட்டமைப்பை அமைப்பது தான் நியாயமானது.
எனினும் 12 வருடங்கள் கடந்தும் இலங்கையில் அந்தளவிற்கு நாம் விரும்புகின்ற அளவிற்கு ஜனநாயகமும் சமாதானமும் நிலைநாட்டப்படாமல் இருப்பது கவலைக்குரியது. எனவே தமிழ் தேசியவாதிகளான அரசியல்வாதிகளுக்கும் சிங்கள புத்திஜீவிகளுக்கும் நாம் ஒரு வேண்டுகோள் விடுகின்றோம்.
இலங்கையில் வாழும் தமிழர் , சிங்களவர் , முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சமூகங்கள் எல்லோரும் இலங்கையர்கள் என்ற கூற்றின் அடிப்படையில் பூரண சுதந்திரத்துடன் சம உரிமையுடன் வாழக்கூடிய ஒரு சமுதாயத்தை கட்டியெழுப்ப நாடு முன்வர வேண்டும் என்பதே அந்த வேண்டுகோளாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM