சர்வதேச விசாரணையாளர்களை அழைத்து விசாரணை மேற்கொள்ளவேண்டும்: லக்ஷ்மன் கிரியெல்ல

Published By: J.G.Stephan

18 May, 2021 | 08:07 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையாளர்களை அழைத்து விசாரணை மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு விசாரணை மேற்கொள்ளாமல் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஏப்ரல் தாக்குதல்  சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய போதுமான சாட்சியங்கள் இல்லை என சட்டமா அதிபர் தெரிவித்திருக்கின்றார். முறையான சட்சியம் இல்லாமல் வழக்குதொடுக்கமுடியாது. ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கும் தேவையான சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. 

ஏப்ரல் தாக்குதல் தொடர்பான பிரதான சாட்சியம்தான் சஹ்ரானுக்கு யார் சம்பளம் வழங்கியது என்பதாகும். 2010க்கும் 2015க்கும் இடைப்பட்ட காலத்திலேயே சம்பளம் வழங்கப்பட்டிருக்கின்றது. சரத் பொன்சேகா இராணுவ தளபதியாக இருக்கும் போது சஹ்ரானிடமிருந்து எந்த உதவியையும் பெற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்திருக்கின்றார். சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கிய விடயம் தொடர்பான சாட்சியம் ஆணைக்குழுவுக்கு வழங்கினால் அரசாங்கத்தின் உண்மை வெளிப்படும் என்ற காரணத்தினாலே அதனை வெளிப்படுத்தவில்லை.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதிகளுக்கும்  எமது குற்றப்புலனாய்வு பிரிவுக்கும் தொடர்பு இருக்கின்றது. குற்றப்புலனாய்வு அதிகாரியான நிலந்த ஜயவர்த்தன அன்று அவருக்கு கிடைத்த தகவல்களை அப்போதைய ஜனாதிபதிக்கு தெரிவிக்கவில்லை என்பது ஆணைக்குழு சாட்சியத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றது. தொடர்பு இருந்ததாலே தகவல்களை தெரிவிக்காமல் இருந்திருக்கின்றது.

அதனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள சர்வதேச விசாரணை அதிகாரிகளுக்கு  ஒப்படைக்கவேண்டும்.  அமெரிக்காவின் எப்.பி.ஐ., ஸ்கொட்லாந்து விசாரணை அதிகாரிகளை அழைத்து இந்த விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு இல்லாமல் ஏப்ரல் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01