சிவலிங்கம் சிவகுமாரன்
பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினை முற்றாக தீர்ந்து விட்டது என்று சொல்வதற்கில்லை. சம்பள நிர்ணய சபையின் மூலம் ஆயிரம் ரூபா நாட்சம்பளம் கிடைத்து விட்டது என ஆராவாரம் செய்யும் தொழிற்சங்கங்கள் கடந்த வார சம்பள பட்டியலை சற்று வாங்கி பார்த்தால் நல்லது. இன்னும் கொழுந்து பறிக்கும் அளவில் பல சிக்கல்கள் நிலவி வருகின்றன. 18 கிலோவுக்கு குறைவாக கொழுந்து எடுத்தவர்களுக்கு ஆயிரம் ரூபா கிடைத்ததா என்பதை தொழிற்சங்கங்கள் தேடிப்பார்த்தல் நன்று.
இவ்வாறு தொழிலாளர்களின் சம்பள விவகாரம் ஒரு முற்றுப்பெறாத நிலையில் தொடர்கதையாக இருக்கும் சந்தர்ப்பத்தில் இம்மாதம் தமக்கு சந்தா நிறுத்தப்பட்டுள்ளது என்று சில தொழிற்சங்கங்கள் கவலை வெளியிட்டுள்ளன. இது குறித்து பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிக்கை எதையும் வெளியிடவில்லை, ஆனால் அக்கட்சியை சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் அது குறித்து கோபப்பட்டுள்ளனர். சந்தா அறவிடாது ஒரு புதிய அத்தியாயத்தை நாம் ஏற்படுத்துவோம் என்று ஏற்கனவே இ.தொ.கா அறிவித்திருந்தது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ராமேஷ்வரன் கடந்த வருடத்தில் இதை வலியுறுத்தியும்இருந்தார்.
தொழிலாளர்களிடமிருந்து முற்றாக சந்தா அறவிடாத ஒரு நிலைமையை மலையகத்தில் இ.தொ.கா மட்டுமே முதலில் ஏற்படுத்தும் என்று அவர் கூறியிருந்தார். இந்நிலையில் சம்பள நிர்ணய சபையின் மூலம் தொழிலாளர்களின் சம்பளம் தீர்மானிக்கப்பட்டு அம்முறையின் மூலம் இரண்டாவது மாதத்திற்கான சம்பளத்தை தொழிலாளர்கள் பெற்றிருக்கின்றனர். ஆனால் எந்த தொழிற்சங்கத்துக்கும் சந்தா அறவிடப்பட்டிருக்கவில்லை. இது தொழிற்சங்கங்களுக்கு கம்பனிகளின் இரண்டாவது பயமுறுத்தலாகும். ஏனென்றால் முதலாவதாக மேலதிக கொடுப்பனவை வழங்க முடியாது என்று அவை ஏற்கனவே தமது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டன.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-05-16#page-6
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM