முள்ளிவாய்க்கால் ஆத்மசாந்தி பூஜை நிகழ்வை செய்திசேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுடன் வவுனியா பொலிஸார் மல்லுக்கட்டலில் ஈடுபட்டனர்.
வவுனியா தமிழ்விருட்சம் அமைப்பு மற்றும் கருமாரி அம்மன் கோவில் நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் மண்ணில் மரணித்த தமிழ் மக்களிற்கான ஆத்மசாந்தி பிரார்த்தனை நிகழ்வு குட்செட் வீதி கருமாரி அம்மன் கோவிலில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
அதனை செய்தியாக்க சென்ற வவுனியா பிராந்திய ஊடகவியலாளர்களுடன் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் மல்லுக்கட்டிதுடன்,அடையாள அட்டையை காண்பிக்குமாறு அச்சுறுத்தியிருந்தனர்.
இதன்போது அரசாங்க தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஊடக அடையாளட்டயை பொலிஸாருக்கு காண்பித்த நிலையில் அதனை தவிர்த்துவிட்டு தேசிய அடையாள அட்டையை காண்பிக்குமாறு தெரிவித்தனர்.
பின்னர் தேசிய அடையாள அட்டையின் பிரகாரமே வெளியில் வரமுடியும் என்றும் அனைவருக்கும் ஒரு நடைமுறையே என்றும் கடுமையாக தெரிவித்தனர்.
எனினும், இலங்கை பொலிஸ் திணைக்களம், மற்றும் தகவல் திணைக்களம் ஆகியன ஊடகவியாலாளர்கள் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நேரங்களிலும் செய்தியினை சேகரிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக பொலிசாருக்கு தெரியப்படுத்தியபோதும், அவர்கள் அதனை ஏற்க மறுத்தனர். பின்னர் சிறிது நேரத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM