மாகாண எல்லைகளை கடக்க முயன்ற 34 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன

Published By: Vishnu

17 May, 2021 | 11:55 AM
image

(செ.தேன்மொழி)

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நேற்று ஞாயிறுக்கிழமை 34 வாகனங்கள் மாகாண எல்லைகளை கடக்க முயன்றதுடன், அவை அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன கூறினார்.

மாகாண எல்லைகளை கடக்க முற்படும் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி செயற்படும் நபர்களுக்காக இதுவரையில் அறிவுறுத்தல்கள் மாத்திரமே வழங்கப்பட்டன. 

எனினும் இனிவரும் காலங்களில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவதுடன், அவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் மற்றும் மேல்மாகாணத்திற்கு பிரவேசிக்கும் வாகனங்கள் தொடர்பில் 14 பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருக்கின்றன. 

அதற்கமைய 1583 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அந்த வாகனங்களில் பயணித்த 3452 பேர் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுள் பெரும்பாளானோர் அத்தியாவசிய சேவையின் நிமித்தமே சென்றுள்ளதுடன், இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்ட 213 பேருக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறனார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21