நுவரெலியா மாவட்டத்தில் 9 கிராம சேவகர் பிரிவு பகுதிகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
அட்டன் பகுதியில் ஒன்றும், நோர்வூட் பகுதியில் மூன்றும், பொகவந்தலாவை பகுதியில் ஐந்தும் ஆகிய பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைக்கு அமையவே இவ்வாறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி பொகவந்தலாவை பொலிஸ் பகுதியில் கெர்க்கஸ்வோல்ட், பொகவான, லொய்னோன், கொட்டியாகல, பொகவந்தலாவை ஆகிய கிராம சேவகர் பகுதிகளும், நோர்வூட் பொலிஸ் பகுதியில் வெஞ்சர், இன்ஜஸ்ட்ரி, டிலரி ஆகிய கிராம சேவகர் பகுதிகளும், அட்டன் பொலிஸ் பகுதியில் என்பீல்ட் கிராம சேவகர் பகுதியும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அந்த பகுதிக்குள் உட்பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமுலாகியுள்ள பயணத்தடை மீள் அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என நுவரெலியா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அங்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM