சீனாவின் மத்திய நகரமான வுஹான் மற்றும் கிழக்கு மாகாணமான ஜியாங்சுவில் உள்ள ஷெங்ஸே நகரம் ஊடாக இரு சூறாவளிகள் வீசியதில் 12 பேர் உயிரிழந்துள்ளதோடு, நுற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹானில் வீசிய சூறாவளியால் எட்டு பேர் உயிரிழந்துள்ளார்கள்.
குறித்த சூறாவளி வெள்ளிக்கிழமை கெய்டியன் மாவட்டம் வழியாக இரவு 8:39 மணிக்கு வீசியதில் 280 பேர் காயமடைந்துள்ளனர்.
சூறாவளியால் வுகான் நகரில் 27 வீடுகள் இடிந்து விழுந்தன. இதுதவிர 130 வீடுகள் சேதமடைந்தன. கட்டிடப் பணிகள் இடம்பெற்ற இடத்தில் உள்ள கூடாரங்கள், 2 கிரேன்களும் சேதமடைந்தன.
மற்றொரு சூறாவளி ஜியாங்சு மாகாணத்தின் சுஜோ பகுதியில் உள்ள ஷெங்ஸே நகரை தாக்கியது. அதில், நான்கு பேர் உயிரிழந்துள்ளதோடு, 149 பேர் காயமடைந்துள்ளனர்.
இதன்காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சீனாவின் வர்த்தக மையமான ஷாங்காய், சுஜோவிலிருந்து 100 கி.மீ தூரத்தில், சக்திவாய்ந்த இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.
சனிக்கிழமையன்று ஷாங்காய் மற்றும் யாங்சே நதி டெல்டா பிராந்தியத்தின் பிற பகுதிகளில் மேலும் பலத்த புயல்கள் எதிர்பார்க்கப்படுவதாக மாநில வானிலை முன்னறிவிப்பாளர் தெரிவித்தார்.
காலநிலை மாற்றத்தின் விளைவாக சீனா மிகவும் தீவிரமான வானிலை எதிர்கொள்கிறது .வெப்ப அலைகள் மற்றும் வெள்ளம் போன்ற பேரழிவுகளின் ஆபத்து வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM