பேராதனைப் பல்கலை மாணவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் 

Published By: Priyatharshan

24 Aug, 2016 | 09:37 AM
image

பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் இரு மாண­வக்­ குழுக்­க­ளி­டையே ஏற்­பட்ட மோதலில் காய­ம­டைந்த ஐவர் பேரா­தனை போதனா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைபெற்று வரு­கின்றனர். 

நேற்று முன்தினம் இரவு இடம்­பெற்ற இந்த மோதல் குறித்து மத்­திய மாகா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.ஏ.டி.எஸ். குண­வர்­த­னவின் உத்­த­ர­வுக்கு அமைய பேரா­தனை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரியின் கீழ் விஷேட விசா­ரணை ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ளது.

காய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் உள்ள மாண­வர்­க­ளி­டமும் பேரா­தனை பல்­க­லையின் இணைந்த சுகா­தார விஞ்­ஞான பீடத்தின் முதலாம் தர மாண­வர்கள் மற்றும் இரண்டாம் வருட மாண­வர்கள் பலரிடமும் இது குறித்து வாக்கு மூலங்கள் பதிவு செய்­யப்பட்­டுள்­ள­தா­கவும் மேலும் பல­ரிடம் வாக்கு மூலம் பெறப்­ப­ட­வுள்­ள­தா­கவும் பேரா­தனை பொலிஸார் தெரி­வித்­தனர்.

எவ்­வா­றா­யினும் நேற்று மாலை வரை பொலிஸார் முன்­னெ­டுத்த ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களின் பிர­காரம், அண்­மையில் இடம்­பெற்ற மாணவர் கூட்டம் ஒன்றில் மாண­வர்கள் சிலர் கலந்­து­கொள்­ளாமை தொடர்பில் இணைந்த சுகா­தார விஞ்­ஞான பீடத்தின் முதலாம் தர மாண­வர்கள் மற்றும் இரண்டாம் வருட மாண­வர்­க­ளி­டையே கார­சா­ர­மான வார்த்தைப் பிர­யோ­கங்கள் நேற்று முன் தினம் இரவு இடம்பெற்றுள்ளன. இந்த வாய்த்­தர்க்­க­ம் மோதலில் முடி­வ­டைந்­துள்­ள­தாக முதல் கட்ட விசா­ர­ணை­களில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளன.

இந் நிலை­யி­லேயெ இந்த மோதலால் காய­ம­டைந்த 5 மாண­வர்கள் பேரா­தனை போதனா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைபெற்று வரு­வ­தா­கவும் அவர்­களின் நிலைமை கவலைக்கிட­மக இல்லை எனவும் பொலிஸார் குறிப்­பிட்­டனர்.

தாக்கு­த­லுக்குள்­ளான மாண­வர்­களால் பேரா­தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக பிரதேசத்துக்கு பொறுப்பான் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53