யுத்த நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசாவின் ஹமாஸ் ஆட்சியாளர்களுடனான மோதல் சீற்றமடையும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
இதனால் காசாவில் இஸ்ரேல் குண்டுவீச்சு தொடர்ச்சியாக எட்டாவது நாளில் நுழைந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காசா நகரில் இஸ்ரேலிய படையினர் முன்னெடுத்த தாக்குதல்களில் மூன்று கட்டிடங்கள் தரை மட்டமாகியது. 42 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்தனர்.
காயமடைந்த பாலஸ்தீனியர்கள் ரஃபா எல்லையைத் தாண்டி எகிப்துக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக பாலஸ்தீனிய மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
ஒரு வாரத்திற்கு முன்னர் சமீபத்திய வன்முறை தொடங்கியதில் இருந்து காசா பகுதியில் 58 சிறுவர்கள் மற்றும் 34 பெண்கள் உட்பட குறைந்தது 192 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் சார்பில் இரு சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வன்முறை குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் ஞாயிற்றுக்கிழமை கூடியது, ஆனால் ஒரு கூட்டு அறிக்கையை அது ஏற்கத் தவறிவிட்டது.
யுத்த நிறுத்தத்தை நிறுத்தி வைப்பதற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசாவின் ஹமாஸ் ஆட்சியாளர்களுடனான மோதல் சீற்றமடையும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
சனிக்கிழமை இஸ்ரேல் குண்டு வீசிய கட்டிடத்திற்குள் ஹமாஸ் இராணுவ உளவுத்துறை செயல்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்த கட்டிடம் சர்வதேச ஊடகங்களான அசோசியேட்டட் பிரஸ் மற்றும் அல் ஜசீரா அலுவலகங்களை கொண்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM