நாட்டில் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்று நிலைமையின் காரணமாக மாவட்டங்கள் தோறும் தொற்றிற்கு உள்ளாகும் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கக் கூடியவாறான ஏற்பாடுகள் சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதற்கு இணையாக இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்வின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக 10 நாட்களில் 10,000 கட்டில்கள் எனும் செயற்றிட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மன்னார் மாவட்ட இளைஞர்களும் தமக்கு வழங்கப்பட்டுள்ள உன்னத பணியை மிகவும் திறம்பட ஆற்றி வருகின்றனர்.
மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட காரியத்தின் ஊடாக மாவட்டங்களில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பிரதேச சம்மேளனங்கள் ஊடாக கொரோனா நோயாளர்களை பராமரிப்பதற்கான தலா 10 கட்டில்கள் உருவாக்கும் பணி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில், மன்னார் மாவட்டத்தில் உள்ள மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள பிரதேச சம்மேளனங்களிலும் 50 கட்டில்கள் உருவாக்கும் பணி மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
மன்னார் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் அங்கம் வகிக்கும் இளைஞர் யுவதிகள் கலந்துக்கொண்டு குறித்த செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM