(எம்.மனோசித்ரா)
கொவிட் தடுப்பூசி வழங்கும் பணிகளை துரிதமாக முன்னெடுப்பதை இலக்காகக் கொண்டு மேல் மாகாணத்தில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 59 தடுப்பூசி நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
எனவே போக்குவரத்து தடை நடைமுறையிலிருந்தாலும் அருகிலுள்ள தடுப்பூசி நிலையங்களுக்குச் சென்று அவற்றை பெற்றுக் கொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கொழும்பில் மொவுன்ட்லவினியா, தெஹிவலை, பொரளை, கொட்டாவ, பாதுக்கை, கிரான்பாஸ், மட்டக்குளி, வெள்ளவத்தை, மாளிகாவத்தை, மருதானை, நாரஹேன்பிட்ட, ஜிந்துபிட்டி, கிருலப்பனை, மிரிஹான, தலங்கம மற்றும் ஹோமாகம ஆகிய பகுதிகளில் தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதே போன்று கம்பஹாவில் கட்டுநாயக்க, நிட்டம்புவ, நீர்கொழும்பு, களனி, பியகம, திவுலபிட்டி, கவத்தை, கம்பஹா, தொம்பே, மினுவாங்கொடை, மீரிகம, வத்தளை, ஜாஎல, றாகமை மற்றும் சீதுவ ஆகிய பிரதேசங்களில் தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
களுத்துறையில் மத்துகம, புளத்சிங்கள, அகலவத்தை, மில்லனியாவ, இங்கிரிய, அகுருவத்தொட்ட, ஹொரனை, வத்துவ, பாணந்துரை தெற்கு, அழுத்கம, பயாகல மற்றும் களுத்துறை வடக்கு ஆகிய பகுதிளிலும் தடுப்பூசி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM