மரகறிகள், பழங்களை பிரதேச செயலாளர் ஊடாக கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை: மஹிந்தானந்த

Published By: J.G.Stephan

15 May, 2021 | 12:55 PM
image

(இராஜதுரை ஹஷான்)

விவசாயிகள் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம், தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையம் ஆகியவற்றுக்கு கொண்டு செல்லும் மரகறிகள் ,மற்றும் பழங்களை பிரதேச செயலாளர் ஊடாக கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள்  தம்புள்ளை மற்றும் தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையங்களுக்கு தங்களின் விவசாய உற்பத்திகளை  கொண்டு  சென்றுள்ளார்கள்.

 கொழும்பு மெனிங் மொத்த விற்பனை மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட மரகறிகள் மற்றும் பழங்கள் கொழும்பு பிரதேச செயலாளர் ஊடாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

கொவிட் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பொருளாதார மட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

 மரகறி மற்றும் பழங்கள் மொத்த உற்பத்தியாளர்களிடமிருந்து உற்பத்திகளை நேரடியாக பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள்  பிரதேச செயலக பிரிவின் ஊடாக  முன்னெடுக்கப்படுகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14