(செ.தேன்மொழி)
முழு நேர போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் , மருந்தகங்கள் தவிர்ந்த (பாமசி) வேறு எந்தவொரு வர்த்தக நிலையத்தையும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
அத்தோடு தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் வெளியில் செல்லும் நடைமுறை இந்த தினங்களுக்கு , அதாவது இன்றிலிருந்து எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 4 மணிவரையில் செல்லுபடியாகாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
முழு நேர போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் செயற்படும் விதம் தொடர்பில் மக்கள் மத்தியில் தெளிவின்மை காணப்பட்டது. எனவே இது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில் ,
நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணிமுதல் , எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரையில் முழு நேர போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று வெள்ளிக்கிழமை , நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் முழுமையான போக்குவரத்து கட்டுபாடு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்த 3 நாட்களும் வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்களுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். அதே போன்று அத்தியாவசிய சேவைகளுக்கும் அனுமதி வழங்கப்படும். இவற்றை தவிர்த்து வேறு எந்தவொரு காரணிகளுக்காகவும் எந்தவொரு நபருக்கும் வெளியில் நடமாடுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது.
இதன்போது மருந்தகங்கள் தவிர்ந்த (பாமசி) வேறு எந்தவொரு வர்த்தக நிலையத்தையும் திறப்பதற்கு அனுமதிவழங்கப்பட மாட்டாது. ஒளடதங்களை விநியோகிப்பதற்கு முடியும். எனினும் இந்த காலப்பகுதியில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கமைய செல்வதற்கும் அனுமதிவழங்கப்பட மாட்டாது.
எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணியின் பின்னரே அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கமைய செல்வதற்கான அனுமதி வழங்கப்படும். அதனால் முழுமையான போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் அனைவரையும் தங்களது வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM