விபத்தில் படுகாயமடைந்த தாயும் மகனும் உயிரிழப்பு

Published By: Digital Desk 4

13 May, 2021 | 09:26 PM
image

யாழ்ப்பாணம், மானிப்பாய் உரும்பிராய் வீதியில் கடந்த 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த தாயும் மகனும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளனர்.

சிகிச்சை பயனளிக்காமல் இருவரும் உயிரிழந்தனர் என இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இறப்பு விசாரணைக்காக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தில் வல்வெட்டித்துறை வேம்படியைச் சேர்ந்த மோகனதாஸ் பிறேமாவதி (வயது-68) என்ற தாயாரும் அவரது மகனான மோகனதாஸ் திலீபன் (வயது-32) என்பவருமே உயிரிழந்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வழிபட காரில் பயணித்த போது, மானிப்பாய் – உரும்பிராய் வீதியில் கார் வேகக்கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகியது.

அதில் தாயும் மகனும் படுகாயமடைந்தனர். காரில் பயணித்த மேலும் ஐவர் காயமடைந்தனர் என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47