ரியோ 2016 ஒலிம்பிக் விளையாட்டு விழா கொண்டாட்டங்கள் மிகுந்த முடிவு விழாவுடனும் 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவை நடத்தவுள்ள டோக்கியோவுக்கு ஒலிம்பிக் கொடியை கையளிக்கும் வைபவத்துடனும் நிறைவுக்கு வந்தது.
ஒலிம்பிக் விளையாட்டு விழாவை வெற்றிகரமாக நடத்திய பெருமையுடன் ஏற்பாட்டாளர்களும் ரியோ மக்களும் ஆனந்தக் கண்ணீர் விட, இயற்கை அன்னையும் இறுதி நாளன்று மழை பொழியச் செய்து ஆசியை வழங்கினார்.
மூன்று மணி நேரம் நீடித்த முடிவு விழா வைபவம் ஈரலிப்பு மிகுந்த மரக்கானா விளையாட்டரங்கில் பிரேஸில் கலாசாரங்களை பிரதிபலிக்கும் கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது.
பிரேஸிலில் மிகவும் பிரசித்தி பெற்ற வீதி கொண்டாட்ட விழாவான கொரடாவோ டா போலா ப்ரெட்டா நிகழ்ச்சி அரங்கில் குழுமியிருந்த சுமார் 80,000 ரசிகர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.
இன்னும் நான்கு வருடங்களில் 32ஆவது ஒலிம்பிக் அத்தியாயத்தை அரங்கேற்றவுள்ள டோக்கியோ நகர் தொடர்பான அறிமுக நிகழ்வு டோக்கியோ டைம் ஜஸ்ட் என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்டது.
முடிவு விழாவுக்கு முந்திய தினத்தன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச், ஒலிம்பிக் விளையாட்டு விழாவை மக்களின் விளையாட்டு விழா, மிகவும் மகிழ்ச்சிகரமான விளையாட்டு விழா, மிகவும் அழகான விளையாட்டு விழா, உணர்ச்சிகரமான விளையாட்டு விழா என எல்லோரும் புகழ்ந்துவிட்டனர். நான் எனது முடிவு விழா உரையில் புதிய வார்த்தை ஒன்றைப் பிரயோகிக்கத் தேட வேண்டியுள்ளது என்றார்.
அதற்கு அமைய வியத்தகு நகரில் வியத்தகு ஒலிம்பிக் விழா என முடிவு விழாவில் தோமஸ் பெச் குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து பேசிய அவர், மிகவும் கடினமான சூழ்நிலையில் கடந்த 16 தினங்களாக (போட்டிகள் நடைபெற்ற தினங்களின் எண்ணிக்கை) ஐக்கிய பிரேசில் முழு உலகையும் உற்சாகத்தில் மிதக்க வைத்தது என்றார்.
முடிவு விழாவில் கணினி விளையாட்டுப் பொம்மை சுப்பர் மரியொவின் ரூபத்தில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் உருவம் காட்சிப்படுத்தப்பட்டபோது முழு அரங்கமே கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தது.
அத்துடன் உலக அதிசயங்களில் ஒன்றான மீட்பர் கிறிஸ்துவின் தோற்றம், கரும்பு மலை என்பவற்றை எடுத்துக்காட்டும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
முடிவு விழா வைபவத்தின்போது ஒலிம்பிக் கொடி, டோக்கியோ ஆளுநர் யூரிக்கோ கொய்க்கேயிடம் ரியோ மாநகர பிதா எடுவார்டோ பாயஸினால் வைபவரீதியாக கையளிக்கப்பட்டது.
ரியோ 2016 - ஒப்ரிகாடோ (நன்றி), டோக்கியோ 2020 - யொக்கோசோ (நல்வரவு). விழா முடிவில் வாணவேடிக்கை மரக்கானா அரங்கையும் அதன் சுற்றுச் சூழலையும் பிரகாசிக்கச் செய்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM