இந்தியாவில் சர்வதேச செவிலியர் தின விழாவில் வைத்தியசாலையின் தலைமை அதிகாரி ரவிச்சந்திரன் தாதியர்களின் கால்களில் விழுந்து கண்ணீர் விட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இன்று மே 12 ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் நினைவாக சர்வதேச செவிலியர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், கோவையிலுள்ள வைத்தியசாலையில் சர்வதேச செவிலியர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட வைத்தியசாலையின் தலைமை அதிகாரி ரவிச்சந்திரன் பெருந்தொற்றை கருத்தில் கொள்ளாமல் நோயாளிகளுக்கு உதவும் தாதியர்கள் போற்றுதலுக்குரியவர்கள் என புகழாரம் சூட்டியுள்ளார்.
அப்போது உணர்ச்சிவசப்பட்ட வைத்தியசாலையின் தலைமை அதிகாரி ரவிச்சந்திரன், கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் தாதியர்களின் கால்களில் விழுந்து நீங்கள்தான் தற்போதைய சூழலில் கடவுள் என கூறி கண்ணீர் விட்டுள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு நாள் பாதிப்பு 25,000 மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் வைத்தியசாலையில் வைத்தியர்களும் மற்றும் தாதியர்களும் தங்கள் உயிரை பனையம் வைத்து தங்கள் கடமைகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM