(எம்.மனோசித்ரா)
கர்பிணிகளுக்கு தொற்று ஏற்படும் போது அவர்களுக்கு கொவிட் பாதிப்பு தீவிரமடைவதோடு , கர்ப்ப நிலையிலும் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் தொற்றுக்குள்ளான கர்பிணியொருவர் பிரசவிக்கும் குழந்தைக்கும் தொற்று ஏற்படக் கூடும்.
எனவே கர்ப்பிணிகளும் , கர்ப்பிணிகள் உள்ள வீட்டாரும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
முன்னரை விட தற்போது சிறுவர்களுக்கும் அதே போன்று கர்ப்பிணிகளுக்கும் அதிகளவில் தொற்று ஏற்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு தொற்று ஏற்படும் போது அவர்களுக்கு கொவிட் பாதிப்பு தீவிரமடைவதோடு, பிரசவத்திலும் சிக்கல் ஏற்படுகிறது. எனவே தொற்றுக்குள்ளான கர்ப்பிணியொருவர் பிரசவிக்கும் குழந்தைக்கும் தொற்று ஏற்படக் கூடும்.
எனவே கர்பிணிகளுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் விரைவாக வைத்தியசாலைகளுக்குச் சென்று கொவிட் பரிசோதனைகளை முன்னெடுத்து தமக்கு தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதேவேளை கர்ப்பிணிகள் உள்ள வீடுகளில் வசிக்கும் ஏனையோரும் இவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்.
தற்போதுள்ள நிலைமைக்கமைய ஒரே நேரத்தில் முழு நாட்டிலும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவை கிடையாது.
தற்போதுள்ள நிலைமையை கட்டுப்படுத்த முடியும். எனினும் நாளாந்தம் நாம் இவ்விடயங்களை மீளாய்வு செய்கின்றோம். மீளாய்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முறைமையை நாம் நடைமுறைப்படுத்துவோம்.
போக்குவரத்து கட்டுப்பாடுகளின் ஊடாக நபரொருவர் தான் வசிக்கும் பிரதேசத்திலிருந்து பிரிதொரு இடத்திற்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்பதையே எதிர்பார்க்கின்றோம். எனவே சட்டங்களை அமுல்படுத்தி சகல பிரதேசங்களையும் முடக்குவதை விட ஒவ்வொருவரும் உணர்ந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே பொறுத்தமானது.
நாட்டில் தற்போது கொவிட் தடுப்பூசி வழங்கும் செய்பாடுகள் திட்டமிடலுடன் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எந்தவொரு தடுப்பூசியும் காலாவதியாகவில்லை.
எனவே மக்கள் அனைவரையும் அச்சமின்றி தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். எதிர்வரும் நாட்களில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்கள் வேகமாக முன்னெடுக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM