தற்போதுள்ள கொரோனா தீவிர தொற்று நிலையினை சமாளிப்பதற்காக வடக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று வரை 22 இறப்புக்கள் பதிவாகியுள்ளன.
தற்போது நாடு பூராகவும் ஏற்பட்டு வரும் தீவிர கொரோனா நிலையினை எதிர்கொள்வதற்காக வடக்கு மாகாணத்திலும் சுகாதாரப் பிரிவினரால் பல்வேறுபட்ட முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்த வகையில் முதல் கட்டமாக வடக்கு மாகாணம் முழுவதிலும் இடைநிலை சிகிச்சை நிலையங்களை மாவட்ட ரீதியில் புதிதாக அமைத்து வருகின்றோம். இந்த நிலையங்களில் நோய் அறிகுறிகள் அற்றவர்கள் இங்கே சிகிச்சைக்காக அனுமதிக்கப் படுவார்கள்.
வடக்கு மாகாணத்தில் குறிப்பாக கோப்பாய் மற்றும் கிளிநொச்சியில் இயங்கி வருகின்ற சிகிச்சை நிலையங்களை தவிர மேலதிகமாக கிளிநொச்சியில் பாரதி புரத்திலும் அதைப்போல முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பகுதியிலும் புதிதாக சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டு அவை இயங்க ஆரம்பித்துள்ளன.
தற்போது இனங்காணப்படும் நோயாளர்கள் நோய் அறிகுறியுடன் இனங்காணப்பட்டு வருகின்றமை அவதானிக்கப்படுகின்றது.
குறிப்பாக தென்னிலங்கையில் ஏற்படுகின்ற நிலைமையைப் பொறுத்து நாங்கள் இந்த கருத்தினை வெளியிடுகின்றோம் அத்துடன் தொற்றுக்குள்ளாகும் பலருக்கு சுவாசத் தொகுதியில் பாதிப்பு ஏற்பட்டு அவர்களுக்கு ஒக்சிஜன் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
சிலருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க வேண்டிய தேவையும் அவதானிக்கப்பட்டுள்ளது அந்த வகையிலே வடக்கு மாகாணத்திலும் மாவட்ட ரீதியில் வைத்தியசாலைகளை அதற்கு ஏற்றவாறு தயார்ப் படுத்தியுள்ளோம்.
வடக்கு மாகாணத்தில் மாவட்ட ரீதியில் மாவட்ட வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையில் ஒரு விடுதியினை இதற்கு ஏற்றவாறு தயார்படுத்தியுள்ளோம். அதாவது ஆண்களுக்கு ஒரு விடுதி பெண்களுக்கு ஒரு விடுதி என வடக்கு மாகாணத்தில் இந்த ஏற்பாட்டினை ஏற்படுத்தியுள்ளோம்.
நோய் அறிகுறியுடன் இனங்காணப்படும் தொற்றாளர்களை சிகிச்சை அளிக்க ஒக்சிஜன் தேவை படுவோர் மற்றும் அதி தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட வேண்டிய வர்களுக்காகவே இந்த ஏற்பாட்டினை மேற்கொண்டுள்ளோம் அதேபோல தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணித் தாய்மாரை பராமரிக்கவென மாவட்டம் தோறும் அதற்கு தனியான ஒரு விடுதியினை சிகிச்சை நிலையமாக ஏற்படுத்தி வைத்திருக்கின்றோம். பிரசவ அறையுடன் கூடியதாக அந்த விடுதி தயார்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் போதனா வைத்தியசாலையில் அந்த விடுதி விஷேடமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது அதேபோல ஏனைய மாவட்டங்களிலும் ஒரு விடுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதுள்ள கொரோனா தீவிர தொற்று நிலையினை சமாளிப்பதற்காக வடக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM