தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தமிழக எதிர்க்கட்சி தலைவரை தெரிவு செய்ய 3 மணிநேரமாக நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நிறைவுபெற்றது.
கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த முதல் ஆலோசனை கூட்டத்தின்போது எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் மீண்டும் நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த தகவல் முதன் முதலாக அதிமுக.,வின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM