பத்தாண்டு இடைவெளிக்குப் பிறகு மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் தமிழில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் திரை உலகில் சண்டை பயிற்சி இயக்குனராக அறிமுகமாகி, வில்லன் நடிகராகவும் பிரபலமானவர் ஸ்டண்ட் சில்வா.
இவர் இன்னும் பெயரிடப்படாத படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். முன்னணி இயக்குனரான ஏ. எல். விஜய் கதை எழுதியிருக்கும் இந்தப் படத்தில் நடிகர் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கிறார்.
அவருக்கு ஜோடியாக முன்னணி நடிகையும், 'ரவுடி பேபி' பாடல் புகழ் சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் கதையின் நாயகியாக அறிமுகமாகிறார்.
இவர்களுடன் மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ஏற்கனவே இயக்குனர் ஜி என் ஆர் குமரவேலன் இயக்கத்தில் 2011ஆம் ஆண்டில் வெளியான 'யுவன் யுவதி' என்ற படத்தில் நடிகர் பரத்திற்கு ஜோடியாக தமிழ் திரை உலகில் அறிமுகமானவர்.
மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து வரும் இவர், பத்தாண்டு இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிக்கிறார். இந்த படத்தில் இயக்குனரும், நடிகருமான சுப்பிரமணிய சிவா கௌரவ வேடத்தில் நடிக்கிறார்.
படப்பிடிப்பு நிறைவு பெற்று பின்னணி பணிகள் நடைபெற்று வரும் இப்படத்திற்கு விரைவில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பத்தாண்டுக்கு பிறகு நடிகை ரீமா கல்லிங்கல் தமிழில் நடித்திருப்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM