சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக கடந்த 24 மணிநேரத்தில் 351 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் குறித்த குற்றச்சாட்டுக்காக 7,316 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
கொவிட்-19 பரவலை தடுக்க பொது மக்கள் இயலுமான வகையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொதுப் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும்போது முகக் கவசம், சமூக இடைவெளி என்பவற்றை அவசியம் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதேவேளை இன்றைய தினம் பஸ்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகனங்களை கண்காணிக்க சிறப்பு நடவடிக்கை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
பஸ்கள் மற்றும் ரயில்களில் இருக்கை திறனுக்கு ஏற்ப பயணிகளை கொண்டு செல்ல முடியும், அதே நேரத்தில் டாக்சிகள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் சாரதிகளுக்கு கூடுதலாக இருவருக்கு மாத்திரமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் பட்சத்தில் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகளை கைதுசெய்யவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM