காத்தான்குடியில் கடந்த 5-04-2015 மக்கள் பார்வைக்காக அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்ட பின்னர் மூடப்பட்டிருந்த பூர்வீக நூதனசாலை மீண்டும் திறக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக நேற்று மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பூர்;வீக நூதனசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தை, வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட இந்த பூர்வீக நூதனசாலையில் சில உருவபொம்மைகள் (உருவச்சிலைகள்) வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அகற்றுமாறு அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை ஆலோசனை விடுத்திருந்தது.
இதனடிப்படையில் கடந்த ஜுன் மாதம் தொடக்கம் இந்த நூதனசாலை மூடப்பட்டது.
அங்கு வைக்கப்பட்டிருந்த உருவபொம்மைகள் (உருவச்சிலைகள்) தற்போது அங்கிருந்து அகற்றப்பட்ட பின்னர், மீண்டும் இந்த நூதனசாலை மக்கள் பார்வைக்காக நேற்று திறக்கப்பட்டுள்ளது. இந்த நூதனசாலை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மக்கள் பார்வைக்காக திறந்திருக்கும் என அதன் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM