இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 2வது நாளாகவும் அதிகரித்துள்ளது. ஒரேநாளில் புதிதாக 4,14,188 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது நேற்றைய (4,12,262) எண்ணிக்கையை விட சற்று அதிகம் ஆகும்.
இதுதொடர்பாக இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 4 இலட்சத்து 14 ஆயிரத்து 188 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 14 இலட்சத்து 91 ஆயிரத்து 598 ஆக உயர்வடைந்துள்ளது.
கொரோனா தொற்றினால் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3,915 பேர் உயிரிழந்து உள்ளனர். இது நேற்றைய எண்ணிக்கையை (3,980) விட சற்று குறைவாகும்.
இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,34,083 ஆக உயர்வடைந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 507 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 76 இலட்சத்து 12 ஆயிரத்து 351 ஆக உயர்வடைந்துள்ளது.
கொரோனா தொற்றின் காரணமாக தற்போது 36,45,164 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 16 கோடியே 49 இலட்சத்து 73 ஆயிரத்து 58 ஆக உள்ளது என்று தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM