திருகோணமலை மாவட்டத்தில் 85 புதிய கொரோனா தொற்றாளர்கள் நேற்று (05)இணங்காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தின் கொரானா நிலைமை பற்றி நேற்று (05) அவர் மேலும் தெரிவிக்கையில் , உப்புவெளி சுகாதார பிரிவில் 29 பேரும், திருகோணமலை பிரிவில் 2 3பேரும் , கந்தளாய் 8 பேரும், மூதூர் 11பேருமாக புதிய தொற்றாளர்களாக இணங்காணப்பட்டுள்ளார்கள் என்றார் .
திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 14 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன எனவும், திருகோணமலை பகுதியில்தான் அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன .
திருகோணமலை சுகாதார பிரிவில் 5 மரணங்களும், உப்புவெளி பிரிவில் 4 மரணங்களும், மூதூரில் 2 மரணங்களும், கந்தளாயில் 2 மரணங்களும், கிண்ணியாவில் 01 மரணமும் என இவ்வாறு கொரோனா மூலமாக ஏற்பட்ட இழப்பாக காணப்படுகின்றது.
ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 700 தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்ட நிலையில் மே மாதமளவில் தற்போது வரை 205 தொற்றாளர்கள் இணங்காணப்பட்டனர்.
தற்போது கொவிட்-19 சிகிச்சை நிலையங்களுக்காக இடப் பற்றாக்குறை நிலவி வருகிறது. எதிர்வரும் காலங்களில் இதனை நிவர்த்தி செய்யும் வகையில் கோமரங்கடவெல வைத்தியசாலை பயன்படுத்தப்படவுள்ளதுடன், மூதூர் வைத்தியசாலையில் உள்ள 12 படுக்கை கட்டில்கள் தயார் நிலையில் இருந்து வருவதுடன் 50 க்கும் மேற்பட்டவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இனிவரும் காலங்களில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிக்குமானால் சிகிச்சை நிலையங்களை ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM