பிரதமருடனான சந்திப்பை தவிர்த்த வாசுதேவ , விமல் ,கம்மன்பில மீண்டும் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை

06 May, 2021 | 01:15 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன  தலைமையிலான கூட்டணியின் கட்சி தலைவர்களுடன் தனிப்பட்ட பேச்சுவார்த்தையில் ஈடுப்பட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம்  தெரிவித்துள்ளார்.  எதிர்வரும் வாரம்  அப்பேச்சுவார்த்தை இடம் பெறும். தோற்றம் பெற்றுள்ள முரண்பாடுகளுக்கு பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கிறோம். 

கூட்டணியின் பிரதான பங்காளி கட்சி தலைவர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட பெரும்பாலானவர்கள் இம்முறையும் கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை  என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் , பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்தினம்  அலரிமாளிகையில் இடம்  பெற்ற   கட்சி தலைவர் கூட்டம் தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம் பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் இம்முறையும்  அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, உதயகம்மன்பில, விமல்வீரவன்ச, கம்யூனிய கட்சி தலைவர் உள்ளிட்ட பங்காளி கட்சிகளின் தலைவர்கள் கலந்துக் கொள்ளவில்லை.

கட்சி தலைவர் கூட்டத்தில் வழமைக்கு மாறான தரப்பினர்கள் கலந்துக் கொள்வதை காணமுடிகிறது. இதன் காரணமாகவே தொடர்ந்து இரண்டு முறை கட்சிதலைவர் கூட்டத்தை புறக்கணித்தோம்.  நேற்று முன்தினம் இடம் பெற்ற  கூட்டத்திலும் அவ்வாறான தன்மையே காணப்பட்டது.

பிரதமர் தலைமையில் ஏற்பாடு செய்த  கட்சி தலைவர் கூட்டத்தில் 40ற்கும் அதிகமானோர் பங்குப்பற்றியிருந்தார்கள். இவ்வாறான நிலையில் கூட்டணியின் உள்ளக பிரச்சினை தொடர்பில் பேசி அதற்க தீர்வு காண முடியாது என தீர்மானிக்கப்பட்டது.

இதன் பிறகு அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, மற்றும் உதய கம்மன்பல உள்ளிட்ட கட்சி தலைவர்கள் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் பிரதமரை சந்தித்து தனிப்பட்ட பேச்சுவார்த்தைக்கு அனுமதி கோரினார்கள்.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளி கட்சி தலைவர்களை எதிர்வரும் வாரம் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சுவார்த்தையினை நடத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.

பிரதமருடனான பேச்சுவார்த்தையினை தொடர்ந்து கூட்டணிக்குள் தோற்றம் பெற்றுள்ள முரண்பாடுகளுக்கு தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31