கொட்டதெனியாவ இரும்பு தொழிற்சாலையில் 2 இந்தியர்களுக்கு கொரோனா

Published By: Digital Desk 3

05 May, 2021 | 05:01 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கம்பஹா, திவுலபிட்டிய சுகாதார வைத்திய அதிகார எல்லைக்குட்பட்ட கொட்டதெனியாவ - கரபொட்டுவெவ பகுதியில் அமைந்துள்ள இந்திய இரும்பு தொழிற்சாலையில் சேவையாற்றும் இரு இந்திய ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று (05.05.2021) வெளியான பி.சி.ஆர். பெறுபேறுகளின் அடிப்படையில் குறித்த இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக திவுலபிட்டிய பொது சுகாதார பரிசோதகர் எஸ்.ஆ.யு.டி.குலதிலக தெரிவித்தார். 

இந்நிலையில் குறித்த இரு இந்திய  ஊழியர்களையும், அந்த தொழிற்சாலைக்குள்ளேயே தனிமைப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று, தற்போது இந்தியாவில் பரவி வரும் வைரஸ் தொற்றா என ஆராயுமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் திவுலபிட்டிய பொது சுகாதார பரிசோதகர் எஸ்.ஆ.யு.டி.குலதிலக தெரிவித்தார்.

தற்போது பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள இரு இந்தியர்களும் கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதியே இலங்கை வந்துள்ளனர். அவர்களுடன் மேலும் 8 பேர் இலங்கை வந்துள்ளதுடன்,  அந்த 8 பேரும்  அவர்களது தொடர்பு வட்டத்துக்கு உட்பட்டோரும் தனியாக தொறிசாலைக்குள் வேறு இடத்தில் தனிமைபப்டுத்தப்பட்டுள்ளதாக திவுலபிட்டி சுகாதார பரிசோதகர் பணிமனை தகவல்கள் தெரிவித்தன.

குறித்த தொழிற்சாலையில் 67 இந்திய ஊழியர்களும் 184 இலங்கையர்களும் வேலை செய்வதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெரிய நீலாவணை இரட்டை படுகொலை :...

2024-03-28 21:36:38