(செ.தேன்மொழி)
சூரியவௌ மற்றும் மொரவக்க ஆகிய பகுதிகளில் நேற்று செவ்வாய்கிழமை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
சூரியவௌ - சமாஜசேவாபுர பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் வசித்துவந்த இளைஞர் ஒருவரும், அவரது தாயாரும் கூரிய ஆயுத்தத்தால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்போது இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்ததுடன், அவரது தாயார் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சமாஜசேவாபுர பகுதியைச் சேர்ந்த 22வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை மொரவக்க பகுதியில் குடும்ப பிரச்சினையின் காரணமாக தந்தையொருவர் அவரது மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைச் செய்துள்ளார். மொரவக்க - நயாதொல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபரான தந்தை, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் அவரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM