கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட இருவர் கொலை

Published By: J.G.Stephan

05 May, 2021 | 04:53 PM
image

(செ.தேன்மொழி)
சூரியவௌ மற்றும் மொரவக்க ஆகிய பகுதிகளில் நேற்று செவ்வாய்கிழமை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

சூரியவௌ - சமாஜசேவாபுர பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் வசித்துவந்த இளைஞர் ஒருவரும், அவரது தாயாரும் கூரிய ஆயுத்தத்தால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்போது இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்ததுடன், அவரது தாயார் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சமாஜசேவாபுர பகுதியைச் சேர்ந்த 22வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை மொரவக்க பகுதியில் குடும்ப பிரச்சினையின் காரணமாக தந்தையொருவர் அவரது மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைச் செய்துள்ளார். மொரவக்க - நயாதொல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபரான தந்தை, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் அவரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40