பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை விடுதலை செய்யுமாறு கோரி கல்குடா முஸ்லிம் மக்கள் இன்று புதன்கிழமை (5) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ் ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்தவாறு சமூக இடைவெளிகளைப் பேணியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளபர் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சபை உறுப்பினர்கள் உட்பட ஆண்கள். பெண்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
குறித்தஇ ஆர்ப்பாட்டத்தில் அரசே ரிசாட்டின் கைது யாரைத் திருப்திபடுத்த? ரிசாட்டை ஏன் கைது செய்தாய்? காரணத்தை வெளிப்படுத்து! போன்ற சுலோகங்களை ஏந்தியவாறும் விடுதலை செய், விடுதலை செய் ரிசாட்டை விடுதலை செய், போன்ற கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கொரோணா நோய் தொடர்பான விடயங்களை சுட்டிக் காட்டி ஆர்பாட்ட நடவடிக்கையில் ஈடுபடாமல் கலைந்து செல்லும்படி பணித்தனர்.
தவிசாளர். ஏ.எம்.நௌபர் மற்றும் சபை உறுப்பினர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை விடுதலை தொடர்பாக கருத்து தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM