6 இலட்சம் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதை ஏற்றுக்கொள்கின்றோம்: சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே

Published By: J.G.Stephan

05 May, 2021 | 01:34 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
இரண்டாம்  கட்ட  தடுப்பூசி  ஏற்றுவதற்கு  6 இலட்சம் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு இடம்பெற்று வருகின்றது. அதனால் எஸ்ட்ரா செனிகா, முதலாம் கட்ட தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு அதன் இரண்டாம் கட்ட தடுப்பூசி வேறு தடுப்பூசிகளுடன் கலந்து வழங்க முடியுமா என பரிசோதனை செய்து வருகின்றோம். அத்துடன் மக்கள் தேவையற்ற நடமாட்டங்களை தவிர்த்து சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி வந்தால் இதனை கட்டுப்படுத்த முடியும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் தொற்று கடந்த சில வாரங்களாக உலகளாவிய ரீதியில் அதிகரித்திருக்கின்றது. இந்த தொற்று நிலை அடிக்கடி மாற்றமடையும் தன்மை கொண்டது. அதனால் திடீரென தொற்றாளர்கள் அதிகரிக்கலாம். மரணங்கள் அதிகரிக்கலாம். அதனால் அதற்கு ஏற்றவகையில் நாங்கள் முகம்கொடுத்து இதனை கட்டுப்படுத்தவேண்டும். எதிர்க்கட்சி தெரிவிப்பதுபோல் இது அரசாங்கத்தின் தவறால் ஏற்பட்டது அல்ல.

மேலும் பீ.சீ.ஆர் பரிசோதனைகளை அரசாங்கம் திட்டமிட்டு குறைக்கவில்லை. கடந்த சில மாதங்களாக கொவிட் தொற்றாளர்கள்  கண்டுபிடிக்கப்படும் வீதம் குறைவாக இருந்தது. அதனால் பீ.சீ.ஆர் பரிசோதனைகளும் குறைவடைந்தன. இது சாதாரணமாக  இடம்பெறுவதாகும். ஆனால் தற்போது கடந்த மாதம் 12 ஆம் திகதிக்கு பின்னர் பீ.சீ.ஆர் பரிசோதனைகளை அதிகரித்திருக்கின்றோம். வெறுமனே பீ.சீ.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு மாத்திரம் இதனை கட்டுப்படுத்த முடியாது. அதனால் மக்கள் தேவையற்ற நடமாட்டங்களை தவிர்ந்துகொண்டு, கொவிட் தொடர்பான சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்றி செயற்பட்டால் இதனை கட்டுப்படுத்த முடியும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33