ஐ.பி.எல். தொடரில் இன்றிரவு 7.30 மணிக்கு அஹமதாபாத்தில் ஆரம்பமாகவிருந்த 30 ஆவது லீக் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ஈயன் மோகன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவிருந்தன.
எனினும் கொல்கத்தா அணியில் எழுந்துள்ள கொவிட்-19 தொற்று காரணமாக இப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொல்கத்தா அணியில் இரு வீரர்கள் கொரோனா தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்ததையடுத்து ஏனைய வீரர்களும், ஆதரவு ஊழியர்களும் அவர்களது ஹோட்டலில் தற்சமயம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா அணியில் விளையாடும் தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி மற்றும் கேரளாவை சேர்ந்த சந்தீப் வாரியர் ஆகியோரே கெரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
கொவிட்டின் ஆபத்தான இரண்டாவது அலைக்கு எதிராக இந்தியா தொடர்ந்து போராடி வருவதால் 5 வீரர்கள் ஏற்கனவே நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகி விட்டனர்.
ஆண்ட்ரூ டை (ராஜஸ்தான் ரோயல்ஸ்), லியாம் லிவிங்ஸ்டன் (ராஜஸ்தான் ரோல்ஸ்), ரவிச்சந்திரன் அஸ்வின் (டெல்லி கேப்பிட்டல்ஸ்), ஆடம் ஜாம்பா (ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு) மற்றும் கேன் ரிச்சர்ட்சன் (ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) ஆகியே வீரர்களே தொடரிலிருந்து விலகியவர்கள் ஆவர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM