வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட தொற்றாளர்கள் இடைநிலை பராமரிப்பு நிலையங்களுக்கு மாற்றம் 

Published By: Digital Desk 4

03 May, 2021 | 06:01 AM
image

(எம்.மனோசித்ரா)

புத்தாண்டின் பின்னர் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட அதேவேளை , மிகக் குறைந்தளவானோரே குணமடைந்தனர்.

எனவே இடைநிலை பராமரிப்பு நிலையங்களிலும் முழுமையாக தொற்றாளர்கள் சிகிச்சை பெறுவதால் கடந்த ஓரிரு தினங்களாக இனங்காணப்பட்ட தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சையளிக்கப்படுகிறது.

அவ்வாறானவர்களை நாளை திங்கட்கிழமை இடைநிலை பராமறிப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

சுகாதார பணியாளர்களுக்கே முதல் கட்டத்தில் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் - அசேல  குணவர்தன | Virakesari.lk

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

ஏப்ரல் 19 ஆம் திகதிக்கு பின்னரே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். அதற்கமைய 19 ஆம் திகதி இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் சுமார் 10 நாட்கள் சிகிச்சையின் பின்னர் கடந்த இரு தினங்களின் பின்னரே வைத்தியசாலைகளிலிருந்து வீடு திரும்பியிருப்பார்கள்.

எனவே கடந்த நாட்களாக புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டார்களே தவிர குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகும்.

இதன் காரணமாக இடை நிலை பராமறிப்பு நிலையங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. இதுவரையில் செயற்படுத்தப்பட்டு வருகின்ற பெரும்பாலான இடை நிலை பராமறிப்பு நிலையங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன.

எனவே தற்போதுள்ள இடை நிலை பராமறிப்பு நிலையங்களில் படுக்கைகளின் அளவை அதிகரிப்பதற்கும், புதிதாக இடை நிலை பராமறிப்பு நிலையங்களை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே தற்போது வீடுகளிலேயே வைக்கப்பட்டுள்ள தொற்றாளர்களை இன்று சிகிச்சைக்காக இடைநிலை பராமறிப்பு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55